செய்திகள்

சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN


கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 சிதம்பரம்  ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவகாமி அம்மனுக்கு சோழ மன்னர்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவகாம கோட்டம் எனும் தனிக் கோயில் உள்ளது. கடந்த 7-ஆம் தேதி முதல் யாகசாலை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று வந்தன. 
 திங்கள்கிழமை காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் நடைபெற்று, பின்னர் கட யாத்ராதானம் புறப்பட்டது. இதையடுத்து,  ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீஸப்தமாதா, ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீசண்டிகேஸ்வரி, ஸ்ரீசித்ரகுப்தர், ஸ்ரீநடுக்கம் தீர்த்த விநாயகர், ஸ்ரீசக்ரம், த்விஜஸ்தம்பம் ஆகிய பரிவார சந்நிதிகளுக்கும், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமாரசுவாமி கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  பொது தீட்சிதர்கள் கோயில் விமான கலசத்துக்கு கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது. 
 திங்கள்கிழமை இரவு சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகமும், வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றன.  இதேபோல, சிதம்பரம் காயத்திரி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாயத்திரிதேவி கோயிலில் திங்கள்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT