செய்திகள்

பிரசன்ன வெங்கடேசர் பிரம்மோற்சவம் :அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் வலம்

DIN


திருப்பதியை அடுத்த அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் கோலத்தில் பெருமாள் மாடவீதியில் வலம் வந்தார். 
இக்கோயிலில் வியாழக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை பிரசன்ன வெங்கடேஸ்வரர் அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். 
மாடவீதி வலம் முடிந்த பின் உற்சவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது.
இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரர் வலம் வருவதைக் காண மாடவீதியில் பக்தர்கள் திரண்டனர். வாகன சேவைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர். இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகன சேவையின் முன் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

SCROLL FOR NEXT