திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நாளை (மார்ச் 10) நடைபெறுகிறது.
விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடித்து, காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர் மண்டல இணை ஆணையரும், சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையருமான (பொ) தென்னரசு, கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.