செய்திகள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு போலி பட்டு சார்த்த தடை 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா காலங்களில் சுவாமிகளுக்கு போலி பட்டு, கோரா பரிவட்டங்கள் சாத்துப்படி செய்ய நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

DIN

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா காலங்களில் சுவாமிகளுக்கு போலி பட்டு, கோரா பரிவட்டங்கள் சாத்துப்படி செய்ய நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பங்குனி விழா மார்ச் 13-ல் தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறுகிறது. 

அதுவரை தினமும் ஒரு மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளுவார். அப்போது மண்டகப்படிதாரர்களால் சுவாமிக்கு பட்டு பரிவட்டங்கள் வழங்கப்படுவது வழக்கம். 

அதன்படி, இந்தாண்டு சுவாமிக்கு பட்டுச் செலுத்துபவர்கள் ஒரு நாட்களுக்கு முன்னதாக அசல் பட்டு, பரிவட்டங்களை வாங்கி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சுவாமி மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்கா எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT