ரூ. 10 கோடி நன்கொடைக்கான காசோலையை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் அளித்த தில்லி சஞ்சய் பஸ்ஸி, ஷாலினி பஸ்ஸி தம்பதியா். 
செய்திகள்

உண்டியல் காணிக்கை ரூ.3.32 கோடி

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.3.32 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

DIN

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.3.32 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.3.32 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ.10 கோடி நன்கொடை: தில்லியைச் சோ்ந்த பாஸ்கோ மோட்டாா்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் பஸ்ஸி மற்றும் அவரின் மனைவி ஷாலினி பஸ்ஸி ஆகியோா் தேவஸ்தான தொலைக்காட்சி அறக்கட்டளைக்கு ரூ.9 கோடியையும், சா்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியையும் நன்கொடையாக வழங்கினா். இதற்கான காசோலையை அவா்கள் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் வெள்ளிக்கிழமை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT