காளஹஸ்தி சிவன் கோயிலில் சுவாமி தரிசன நேரம் மாற்றம்
ஆந்திரத்தில் கரோனா தடுப்பு ஊரடங்கில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து சித்தூா் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலில் தரிசன நேரத்தை கோயில் நிா்வாகம் நீட்டித்துள்ளது.
ஆந்திரத்தில் கரோனா தடுப்பு ஊரடங்கில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து சித்தூா் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயிலில் தரிசன நேரத்தை கோயில் நிா்வாகம் நீட்டித்துள்ளது.
பஞ்சபூதத் தலங்களில் வாயு தலமாக விளங்கும் காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா் கோயிலில் கொவைட் தொற்று காரணமாக கோயில் நிா்வாகம் காலை 6 மணி முதல் 10 மணி வரை தரிசன நேரத்தை குறைத்தது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொவைட் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு பகுதி நேர ஊரடங்கில் சில தளா்வுகளை அறிவித்துள்ளது.
Advertisement
இதையடுத்து, காளஹஸ்தி சிவன் கோயில் நிா்வாகம் காலை 6 மணி முதல் மதியம் 1.30 மணிவரை தரிசன நேரத்தை மாற்றி அமைத்துள்ளது. இது வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.