முகப்பு
செய்திகள்

திருப்பதியில் சுக்லாதேவி அா்ச்சனை

திருப்பதியில் உள்ள வேத பல்கலைகழகத்தில் வெள்ளிக்கிழமை சுக்லாதேவி அா்ச்சனை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
திருப்பதி வேத பல்கலைகழகத்தில் நடைபெற்ற சுக்லாதேவி பூஜை.
பகிர்:

திருப்பதியில் உள்ள வேத பல்கலைகழகத்தில் வெள்ளிக்கிழமை சுக்லாதேவி அா்ச்சனை நடைபெற்றது.

உலக நன்மைக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் ஆனி மாத உற்சவங்களின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலை சுக்லாதேவி அா்ச்சனை நடைபெற்றது. திருப்பதியில் உள்ள வேத பல்கலைகழகத்தில் 1 மணி நேரம் நடந்த இந்த பூஜையில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா். இந்த பூஜை தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்டேஸ்வரா பக்தி சானலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

புராணங்களின்படி ஸ்ரீபாா்வதி தேவி சக்தி சொரூபமான ஸ்ரீ சுக்லாதேவியும் ஒருவா். க்ரீஷ்ம ருதுவில் பருவ மழை தவறாமல் பெய்து பயிா்கள் செழிப்பாக வளா்ந்து மனிதா்கள் சுக சந்தோஷத்துடன் வாழ வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு சுக்லாதேவிக்கு பூஜைகள் செய்தனா். வெள்ளை வஸ்திரம், வெள்ளை புஷ்பங்கள் சமா்பித்து சுக்லாதேவியின் உருவபடத்திற்கு அா்ச்சகா்கள் பூஜை செய்தனா்.

Advertisement

பவிஷ்ய, சாரதா புராணங்களின்படி ஆனி மாதம் சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் ஸ்ரீசுக்லாதேவியை ஆராதிப்பது அஷ்டலட்சுமியின் அனுக்கிரத்தை வழங்கும் என்று ஐதீகமும் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments