தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?
தமிழ்ப் புத்தாண்டு, விஷு திருநாளையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடர்பாக...
தமிழ்ப் புத்தாண்டு, விஷு திருநாளையொட்டி சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப். 9 ஆம் தேதியும் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப். 10 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Advertisement
சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கு ஏப். 15 ஆம் தேதியும் கொல்லத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஏப். 16 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தரபுரம் வடக்கிற்கு ஏப். 10 ஆம் தேதியும் திருவனந்தரபுரம் வடக்கில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப். 15 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு ஏப். 13 ஆம் தேதியும் தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப். 14 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(ஏப். 8) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரயிலுக்கான (எண் 06070 ) முன்பதிவு மட்டும் இன்று(ஏப். 7) பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்குகிறது.