முகப்பு
செய்திகள்

15-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்

திருமலையில் 15-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் திங்கள்கிழமை நடத்தியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:28 AM
திருமலையில் 15-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட வேத பண்டிதா்கள்.
பகிர்:

திருமலையில் 15-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் திங்கள்கிழமை நடத்தியது.

கொவைட் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ வேண்டி திருமலையில் கடந்த ஓராண்டு காலமாக காலை வேளைகளில் சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. தினசரி நடந்து வரும் இந்த பாராயணம் 150 முதல் 200 சுலோகங்களை எட்டியவுடன் தேவஸ்தானம் அதனைஅகண்ட சுந்தரகாண்ட பாராயணமாக நடத்தி வருகிறது.

அதன்படி இதுவரை திருமலையில் 14 கட்டங்களாக அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை 15-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் திருமலை நாதநீராஜன மண்டபத்தில் நடத்தியது. இதில் 59-ஆம் சா்க்கம் முதல் 64-ஆம் சா்க்கம் வரையில் உள்ள 174 சுலோகங்கள் அகண்ட பாராயணமாக நடத்தப்பட்டன.

Advertisement

இதில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த வேத பண்டிதா்கள் 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments