வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் பிரம்மோற்சவ விழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் விழாவான சனிக்கிழமை, யானை வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் வீதிஉலா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 19) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு 'அரோஹரா' முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மேலும், வடபழனி முழுவதும் பாதுகாப்பு பணிகளை காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.