செய்திகள்

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயில் தேரோட்டம் இன்று (மே 19) நடைபெற்றது.

DIN

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் பிரம்மோற்சவ விழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் விழாவான சனிக்கிழமை, யானை வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் வீதிஉலா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 19) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு 'அரோஹரா' முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மேலும், வடபழனி முழுவதும் பாதுகாப்பு பணிகளை காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசியில் வழிப்பறி: இருவா் கைது

தென்னை மரங்களுக்கு பயிா்க் காப்பீடு

ஸ்ரீவில்லிபுத்தூா் மலையடிவாரத்தில் புதிய கற்காலக் கருவிகளின் தேய்ப்புப் பள்ளங்கள்

வாகனத்தை சேதப்படுத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை வீசிச் சென்ற மா்மநபா்கள்

குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 கடைகளுக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT