சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடைபெற்ற நந்தனார் வீதிஉலா 
செய்திகள்

சிதம்பரத்தில் ஸ்ரீ நந்தனார் வீதிஉலா!

சிதம்பரத்தில் நந்தனார் வீதிஉலா பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீநந்தனார் வீதிஉலா சனிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமே சிவலோகநாதர் ஆலயத்திலிருந்து ஶ்ரீநந்தனார் உருவசிலை ஊர்வலம் புறப்பட்டு சிதம்பரம் தெற்கு சன்னதியை அடைந்தது. அங்கு நந்தனார் கல்விக் கழக தலைவர் கே .ஐ . மணிரத்தினம் தலைமையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமத்துவ மக்கள் படை நிறுவனர் ப.சிவகாமி நந்தனார் பட ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

நந்தனார் பட ஊர்வலம் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் மடத்தைச் சென்றடைந்தது. கீழசன்னதியில் நந்தனாருக்கு பொதுதீட்சிதர்கள் சார்பில் சிறப்புச் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் நந்தனார் கல்விக்கழகத் தலைவர் கே. ஐ. மணிரத்தினம் பொருளாளர் டி.ஜெயச்சந்திரன், கல்விக்கழக செயலாளர் வி.திருவாசகம், டிரஸ்ட் செயலாளர் டி.கே.எம்.வினோபா, நிர்வாகிகள் கஜேந்திரன், மணலூர் ரவி, இளைய அன்பழகன், பி.பன்னீர்செல்வம், கே.கனகசபை, டி.தெய்வசிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Ahead of the Margazhi Arudra Darshan festival at the Chidambaram Sri Nataraja Temple, a procession of Sri Nandanar, one of the Nayanmars (Saivite saints), was held on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏர் இந்தியாவில் விரைவில் தலைமை மாற்றம்!

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

SCROLL FOR NEXT