தி.ரு.வி.க. நகரில் இருந்து திருவான்மியூர் செல்வதற்கு 29சி விரிவு என்ற தடம் எண் கொண்ட பேருந்து (மொத்தம் 2 பேருந்துகள்) காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் மட்டும் இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தை முழுநேர பேருந்துகளாக மாற்றம் செய்யவும் குறைந்தது ஏழு பேருந்துகளையாவது இயக்கவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தின் பெரம்பூர் பணிமனை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார். சுப்பையா, திரு.வி.க.நகர்.