பெருநகர சென்னை மாநகராட்சி 52-ஆவது மண்டலத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோடு அருகில் உள்ள ஆண்டியப்பன் முதலி தெருவில் 2 பள்ளிகள் உள்ளன. இந்தத் தெருவில் வீடுகளில் சேரும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் நேரில் வந்து சேகரிப்பதில்லை. அதனால், இந்தத் தெருவில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொடர்ச்சியாக பாதாள சாக்கடை அடைக்கப்பட்டுள்ளதால் தெரு முழுவதும் சாக்கடை நீர் வழிந்தோடுகிறது. இதனால் பொது சுகாதாரத்துக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஆர்.மணிமொழி, வண்ணாரப்பேட்டை.