சென்னை திருமங்கலம் பள்ளிச் சாலையில் எண்ணற்ற நடைபாதைக் கடைகள் உள்ளன. இதனால் பள்ளி திறக்கும் போதும், விடும் போதும் பெற்றோர்கள் மாணவர்கள், பொதுமக்கள் நடைபாதையில் நடக்க முடியாமல் சாலையில் இறங்கி நடப்பதால் தினமும் விபத்துகள் நடக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடைபாதைக் கடைகளை அகற்ற யாரும் முன்வரவில்லை. நடைபாதைக் கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெ.பெருமாள்சாமி, வில்லிவாக்கம்.