கவிதைமணி

மழை நீர் போல: இராம.வேல்முருகன்

கவிதைமணி
மழைதரும் நீரைப் போலமனதினில் அன்பு வேண்டும்குழைந்திடும் அன்பு மட்டும்குவலயம் காத்து நிற்கும்நிலையிலா உலக வாழ்வுநிலைத்திடும் அன்பு கண்டேவிலையிலா அன்பு ஒன்றேவிளங்கிடும் மாறி டாமல்உண்மையாய் அன்பு செய்வோம்ஓங்குவோம் பாரில்  நாமேபண்பிலும் அன்பு ஒன்றேபாடமாய் கொள்வோம் நாமேநம்மையார் வெல்வார் சொல்வீர்நலம்தரும் அன்பி லாமல்இம்மையில் செம்மை யாகஇருந்திட அன்பு செய்வோம்அன்பினால் வள்ள லாரும்அவர்வழி காந்தி யாரும்இன்பமே வையம்  காணஇகந்தனை வென்றார் அன்றோ?துன்பமே நம்மை விட்டுதூரமா யோட வேண்டின்அன்பதன் பாதை தன்னில்அறிவதைச் செலுத்தி வாழ்வோம்புத்தரும் காட்டிச் சென்றார்பொறுமையாய் போதித் திட்டார்சித்தரும் சொன்னா ரன்றேசிரமதி லேற்றிச் சென்றார்வித்தக ரன்ப ரெல்லாம்வித்தையாய்ச் சொல்வா ரென்றும்எத்துறை யாயின் என்னஎன்றுமே அன்பே வெல்லும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

SCROLL FOR NEXT