கவிதைமணி

கல்லறைப் பூவின் கண்ணீர் துளி: முத்துலெட்சுமி

கவிதைமணி

புல்லில் பனித்துளி
என் கண்ணீர்த் துளி

தகரத்துக்கு
தங்க முலாமா

கருமை நிழலுக்கு
வண்ண நிறங்களா

காற்றின் கோபத்தில்
கருமேகங்கள் உருள்கின்றன

வடியும் மழையில்
உருள்கிறது கண்ணீர்

நட்புக்குள் கருப்பு ஆடா

வஞ்சியை வஞ்சிக்க
நஞ்சைத் தரலாமே

நயவஞ்சகப் பேச்செதற்கு
நட்பெனும் முகமூடியில்

துரோகங்கள் அமில மழை
மென்று விழுங்குகிறேன்

நாடி நரம்பை அறுத்தெரிந்து
குருதிச் சூட்டில் குளிக்கும்
நாசம் நட்பில் துரோகம்

இதோ
முகமூடி அணிந்து
தூக்கிலிடப்படுகிறேன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT