கவிதைமணி

மறுஜென்மம்: கவிஞர். கோவிந்தராஜன் பாலு

கவிதைமணி

பாவங்கள் செய்தால்தான் படைத்திடுவான் மீண்டும். !
படைத்தவனை உருகிடவே பாடிடுவோம் நாளும்.!
காவலாகக் காத்திடுவான் கனிந்துருகி நெஞ்சம். !
கரைசேர்ப்பான் பிறவியினைக் காலமெல்லாம் தஞ்சம்.!

ஆவலாக அலைந்திடுவார் அரக்கராக வஞ்சம்.!
அமைதியில்லா ஆவியாக அலைந்திடுமே யெங்கும். !
ஏவலாக வாழ்ந்திடுவார் இதயத்தில் தீயாய் !
எழுபிறவியும் உண்டென்பார் ஏங்கிடுவார் நாயாய்.!

புவியினிலே பிறந்தவர்கள் புண்ணியங்கள் செய்தால்
புதுப்பிறவி இல்லாமல் பூரணமாய் முக்தி.!
தவிக்கின்ற வாழ்க்கையும்தான் தவிர்த்திடவே வேண்டும். !
தணியாத இறையடியே தாங்குதலே யாண்டும்.!

குவித்திடுவார் செல்வங்கள் குன்றாகத் தானே.!
கொள்வாரோ தன்னுடனே கொண்டிடவே யெங்கும். !
நவில்கின்ற தத்துவங்கள் நான்மறைகள் சொல்லும்.!
நன்றாக வேண்டிடுவோம் நம்பிக்கை வெல்லும். !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT