கவிதைமணி

நிழலைத்தேடி: மீனாள் தேவராஜன்

கவிதைமணி

மாசிப்பனியும் போயிற்று
மரங்களில் துளிர்களும் வந்திடுச்சு
மன்மத வசந்தம் மலர்ந்திடுச்சு
தென்றல் காற்றும் வீசிடுச்சு
கோடை வெயில்  கொளுத்திடவே
நிழல்கள் குளுமை தந்திடவே
குயில்கள் மரங்களில் குந்திடும்
குருவிகள் கிளைகளில் கூச்சலிடும்
குரங்குகள் கிளைகளில் ஊஞ்சலாடும்
கூடிக் கும்மாளம் இடும்
மனிதர் மட்டும் விதிவிலக்கா
மரநிழல்களைத் தேடிப் படுப்பர்
வீடுகளில் விசிறிகள் இல்லை
வேண்டிய காற்று இல்லை
இயற்கை அன்னை எமக்களித்த
இலைகள் நிறைந்த மரமளிக்கும்
கோடைகால நிழலே சுகம்,சுகம்
ஓட்டைகள் நிறைநிழலே சுகம் சுகம்
மரங்கள் இயற்கை அளித்த வரங்கள்
மறந்தும் வெட்டாதீர் வேண்டுதல் விடுகிறேன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT