ஆறோடும் நீரோடும்
ஆனந்தமாக வாழ்ந்தவர்கள்
மக்கள்.
கிணறு வெட்டியும்
குளம் அமைத்தும்
குதித்து குளித்து
கொண்டாடியவர்கள்
மக்கள்.
ஆறுகளை
அழித்து விட்டார்கள்.
நதிகளை
நாசப்படுத்தி விட்டார்கள்.
கிணறுகளைக்
கொன்று விட்டார்கள்.
குளங்களைக்
காணாமல் செய்து விட்டார்கள்.
மிச்சம் இருக்கும் நீரையும்
மாற்றானுக்கு விற்று விட்டது
அரசு.
இன்று
குளிக்கவும் நீரில்லை.
குடிக்கவும் வழியில்லை.
ஆறோடும் நீரோடும்
வாழ்ந்தவர்கள்
கண்ணீரோடும் வியர்வையோடும்
வாழ்கிறார்கள்.