நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

பாடல் - 11

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள்
                             படைத்து, அளித்துக் கெடுக்கும் அப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்
                            சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்
கண்டு பாடவல்லார் வினைபோம் கங்குலும் பகலே.

மூவகைக் குணங்களைக் கொண்ட மும்மூர்த்திகளாகவும் எம்பெருமானே திகழ்கிறான், அவனே இவ்வுலகைப் படைக்கிறான், அழிக்கிறான், காக்கிறான், திருவுந்தியிலே தாமரையைக் கொண்டவன், பாற்கடலிலே பள்ளிகொள்கிறவன், நம் அப்பன், அப்பெருமானுடைய தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டன் சடகோபன் சொன்ன ஆயிரம் திருப்பாடல்களிலே இந்தப் பத்தையும் பாடவல்லவர்களை இரவு, பகல் எக்காலத்திலும் வினைகள் நெருங்காது, நீங்கிப்போகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT