நாள்தோறும் நம்மாழ்வார்

ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

பாடல் - 11

மின்கொள்சேர் புரிநூல் குறளாய் அகல்ஞாலம் கொண்ட
வன்கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
இன்கொள் பாடல்வல்லார் மதனர் மின் இடையவர்க்கே.

ஒளியுடைய முப்புரிநூலை அணிந்த வாமனனாக வந்து, அகன்ற உலகத்தைத் தானமாகப் பெற்றவன், வலிமையான கள்ளன், அப்பெருமானின் திருவடிகளை வணங்கிக் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களை இசையோடு பாடினார், அவற்றில் இந்தப் பத்து இனிமையான பாடல்களும் திருவண்வண்டூரைப்பற்றியவை. இவற்றைச் சொல்லவல்லவர்கள், மின்னல்போன்ற இடையைக்கொண்ட பெண்களுக்கு மன்மதன்போல் ஆவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT