நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 10

செ.குளோரியான்

பாடல் 10

விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்,
நிதியும், நல் சுண்ணமும், நிறை குட விளக்கமும்
மதிமுக மடந்தையர் ஏந்தினர் வந்தே.

வேதங்களிலே கூறப்பட்ட நித்தியசூரிகள், எம்பெருமான் அடியவர்களைக் கண்டு, ‘நம்முடைய பாக்கியத்தாலே இவர்கள் இங்கே வந்தார்கள்’ என்று மகிழ்ந்தார்கள், தங்கள் இடங்களில் செய்யப்படவேண்டிய முறைப்படி அவர்களுடைய பாதங்களைக் கழுவினார்கள், சந்திரனைப்போன்ற முகத்தையுடைய பெண்கள், நிதி எனப்படும் திருவடிநிலைகள், நல்ல வாசனைப்பொடி, நிறைந்த குடங்கள், விளக்குகளை ஏந்திவந்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT