நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3

செ.குளோரியான்

பாடல் 3

கூவிக்கொள்ளாய் வந்து, அந்தோ, என் பொல்லாக் கருமாணிக்கமே,
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்,
மேவித் தொழும் பிரமன், சிவன், இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே, உம்பர் அந்த அதுவே.

பொருந்தித் தொழுகின்ற பிரமன், சிவன், இந்திரன் முதலானோருக்கெல்லாம் தொடக்கமாக அமையும் திருநாபிக்கமலத்துக்கு இடமானவனே, வானவர்களுக்கும் அதே தன்மையாக அமைந்தவனே, என்னுடைய உயிருக்கு உன்னைத்தவிர இன்னொரு பற்றுக்கொம்பை நான் அறியேன், எம்பெருமானே, என்னுடைய துளையிடப்படாத கருமாணிக்கமே, இங்கே வந்து என்னைக் கூவிக்கொள்ளமாட்டாயா, அடடா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT