நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9

செ.குளோரியான்


பாடல் 9

திகழ்கின்ற திரு மார்வில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்வு இடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள் ஊர்தி, போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே.

திகழ்கின்ற திருமார்பிலே திருமகளோடு திகழ்கின்ற திருமால் சேரும் இடம், குளிர்ந்த திருவாட்டாறு. எல்லாரும் புகழ்கின்ற பறவையாகிய கருடனில் ஊர்கிறவன், போர் செய்யும் அரக்கர்களின் குலங்களைக் கெடுத்தவன், எம்பெருமான், சிறியவனாகிய என்னை இகழாமல் என் நெஞ்சத்தில் குடிகொண்டிருக்கிறான், எப்பொழுதும் பிரிவதில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT