பாடல் 4:
கரை உலாவு கதிர் மாமணி முத்தம்
திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர்
உரையின் நல்ல பெருமான் அவர் போலும்
விரையின் நல்ல மலரச் செவடியாரே
விளக்கம்:
இந்த பாடலில் பெருமானின் திருவடிச் சிறப்பு கூறப்பட்டு அதனைப் பற்றிக்கொண்டு உய்வினை அடையுமாறு உணர்த்தப் படுகின்றது. பெருமானின் திருவருளின் வடிவமாக திருவடி கருதப் படுகின்றது. உரை=புகழ்; சென்ற பாடலில் தலத்தின் நீர்வளத்தினை உணர்த்தியவர், இந்த பாடலில் தலத்தின் செல்வ வளத்தினை உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
வயலின் கரைகளில் ஒளிவீசும் மாணிக்கக் கற்கள் சிதறிக் கிடக்க, வயலின் நீரினில் முத்துக்கள் உலாவும் செல்வச் செழிப்பு வாய்ந்த வயல்களை உடைய திருப்புன்கூர் தலத்தில், மிகுந்த புகழினை உடைய பெருமான் உறைகின்றார். நறுமணம் மிகுந்த மலர் ;போன்ற சிவந்த பெருமானின் திருவடிகளை கண்டு தொழுது வணங்குவீராக.