விளையாட்டு

ஒவ்வொரு போட்டியிலும் செஞ்சுரி அடிப்பேன் என நினைத்தேன்: புஜாரா

அணியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு என்னை நிரூபிக்க முயல்வேன்.

எழில்

இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் புஜாரா.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் சரியாக ஆடாததால் இந்தியா ஏ அணியில் அவர் இடம்பெற்றிருப்பது அடுத்து வருகிற சர்வதேசப் போட்டிகளுக்கான பயிற்சியாக அமையும்.

இந்தியா ஏ அணி, ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இரு முதல்தரப் போட்டிகளில் (4 நாள்) விளையாடவுள்ளது. இந்தத் தொடர் பற்றி புஜாரா கூறும்போது:

எனது தோல்விகளை ஒப்புக்கொள்கிறேன். இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கு முன்பு நான் அதிக ரன்கள் அடித்ததால் அதற்குப் பிறகு ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடிப்பேன் என நினைத்தேன். ஆனால் நினைத்த ரன்களை அடிக்கமுடியாதது விரக்தியை ஏற்படுத்தியது. காலம் செல்லச் செல்ல என் தோல்வியை  ஏற்றுக்கொண்டேன்.

இந்தியா ஏ அணியில் விளையாடுவது நல்ல அனுபவமாக இருக்கும். டிராவிட் பயிற்சியாளராக இருப்பது அணிக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும்.

இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து ஆடிவருகிறேன். அவ்வப்போது சில மேட்சுகளில் ஆடவில்லை. அணியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு என்னை நிரூபிக்க முயல்வேன். முன்னாள் வீரர்கள் பலரும் இதைத்தான் எனக்கு அறிவுரையாகச் சொன்னார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT