முரளி விஜய் இந்திய அணிக்குத் தேர்வாகி இருக்கிறார். ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஜூலை 2013க்குப் பிறகு இப்போதுதான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இணையத்தளம் ஒன்றுக்கு முரளி விஜய் பேட்டியளித்துள்ளார். ஒருநாள் அணியில் நிரந்த இடம் பிடிக்காதது பற்றி அவர் கூறும்போது, ‘நான் மன்னிப்புகள் கேட்பவன் அல்லன். ஆனால் நான் தொடர்ச்சியாக எத்தனை மேட்சுகள் ஆடினேன் என்பதையும் பார்க்கவேண்டும். ஒரு பேட்ஸ்மேனுக்கு இது முக்கியம். இது மன்னிப்பு அல்ல. தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலோ, தொடர்களிலோ ஆட வாய்ப்பு கிடைத்ததில்லை’ என்றார்.
31 வயதில் ஒருநாள் அணிக்குத் தேர்வானது பற்றிய விமரிசனங்களுக்குப் பதில் அளித்த விஜய், ‘என்னுடைய உடற்தகுதி சரியாக இல்லாமல், இளைஞர்கள் போல நான் துடிப்புடன் இல்லாமல் இருந்தால் என் மீது விமரிசனம் செய்பவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளமுடியும். 30 வயதாகிவிட்டால் தேர்வுசெய்யக்கூடாது என்றால் மைக்கேல் ஹஸ்ஸி, 39 வயதுவரை விளையாடியிருக்கக் கூடாது. ஐபிஎல் பிளேஆஃப்பில் சிஎஸ்கேவுக்காக ஒரு மேட்ச்சை ஜெயித்துத் தந்தார். இதுபோன்ற உதாரணங்களால்தான் நான் உத்வேகம் கொள்கிறேன். எல்லோருக்கும் வயதாகத்தான் போகிறது. எந்தளவுக்கு நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறீர்கள், எந்தளவுக்கு தொடர்ந்து நன்றாக விளையாடுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.