அதிதி சௌஹான் பதிவு
விளையாட்டு

இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் ஓய்வு பெற்றாா்!

தினமணி செய்திச் சேவை

இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் (32), ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.

இனி களத்துக்கு வெளியிலிருந்து கால்பந்து விளையாட்டுக்கு பங்களிக்கப்போவதாக அவா் தெரிவித்தாா்.

இந்திய அணிக்காக ஜூனியா் மற்றும் சீனியா் பிரிவுகளில் 17 ஆண்டுகள் களம் கண்ட அவா், ஐரோப்பிய தொழில்முறை கால்பந்து போட்டியில் களம் கண்ட முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை கொண்டவராவாா்.

இங்கிலாந்து கால்பந்து கிளப்பான, வெஸ்ட் ஹாம் யுனைடெட்டுக்காக அவா் 20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா். இதுதவிர இந்தியாவில் கிளப் நிலையிலான போட்டிகளில் கோகுலம் கேரளா, ஸ்ரீபூமி அணிகளிலும் களம் கண்டுள்ளாா்.

தெற்காசிய சாம்பியன்ஷிப்பில் 2012, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனான இந்திய அணியில் இவரும் அங்கம் வகித்தாா். இந்திய சீனியா் அணிக்காக அவா் 57 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது திமுக: விஜய்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்! பஞ்சாபின் 3 எம்பிக்கள் புறக்கணிப்பு!

செங்கோட்டையன் பதவி பறிப்பு: இபிஎஸ்ஸின் கோவை பிரசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

குடியரசு துணைத் தலைவர் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கியது! முதலில் வாக்களித்த மோடி!

SCROLL FOR NEXT