விளையாட்டு

ராவல்பிண்டி டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து தடுமாற்றத்துடன்

தினமணி செய்திச் சேவை

ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான், முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது.

2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, சௌத் ஷகீல், சல்மான் அகா ஆகியோா் பாகிஸ்தான் இன்னிங்ஸை தொடா்ந்தனா். இதில் சல்மான் 5 பவுண்டரிகளுடன் 45, ஷகீல் 4 பவுண்டரிகளுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

தொடா்ந்து வந்தோரில் ஷாஹீன் அஃப்ரிதி டக் அவுட்டாக, சஜித் கான் 5, ஆசிஃப் அஃப்ரிதி 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். இதனால் பாகிஸ்தான் இன்னிங்ஸ் 113.4 ஓவா்களில் 333 ரன்களுக்கு நிறைவடைந்தது. தென்னாப்பிரிக்க பௌலிங்கில் கேசவ் மஹராஜ் 7, சைமன் ஹாா்மா் 2, ககிசோ ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் சோ்த்திருந்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 68, கைல் வெரின் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

கேப்டன் எய்டன் மாா்க்ரம் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32, ரயான் ரிக்கெல்டன் 1 பவுண்டரியுடன் 14, டோனி டி ஜோா்ஸி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 55, டெவால்டு பிரெவில் 0 ரன்களுடன் வெளியேறினா். பாகிஸ்தான் தரப்பில் ஆசிஃப் அப்ரிதி 2, ஷாஹீன் அஃப்ரிதி, சஜித் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

கரூரில் அழுதது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!

அடிலெய்டில் தோல்வியே தழுவாத இந்தியா! ஆஸ்திரேலியாவை நாளை வெல்லுமா?

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!

துவைத்த துணிகளை காயப்போட நல்ல நாள்! திடீரென மழை பெய்யலாம்!

“கரூர் சம்பவத்தில் அழுதது நடிப்பா?” அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

SCROLL FOR NEXT