ஆசிய விளையாட்டுப் போட்டி: முதல் தோல்வியைச் சந்தித்தது இந்திய கபடி அணி!
கபடி போட்டியின் 3-வது ஆட்டத்தில் இந்திய அணியைத் தோற்கடித்து அதிர்ச்சியளித்துள்ளது தென் கொரிய அணி...
18-ஆவது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
இன்று நடைபெற்ற கபடி போட்டியின் 3-வது ஆட்டத்தில் இந்திய அணியைத் தோற்கடித்து அதிர்ச்சியளித்துள்ளது தென் கொரிய அணி.
2016 கபடி உலகக் கோப்பைப் போட்டியிலும் தென் கொரியாவிடம் இந்திய அணி தோற்றது. எனினும் பிறகு கோப்பையை இந்திய அணி வென்றது.
இன்றைய போட்டியில் ஆரம்பம் முதலே தென் கொரிய அணி இந்தியாவுக்குக் கடும் சவாலை அளித்தது. முதல் பாதியில் அந்த அணி, 14-11 என முன்னிலை பெற்றிருந்தது. கடைசிக்கட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்தியாவைத் தோற்கடித்து கவனத்தை ஈர்த்தது கொரிய அணி.
Advertisement
Advertisement
ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்திய கபடி அணி சந்திக்கும் முதல் தோல்வி இது. இந்திய அணி நாளைய ஆட்டத்தில் தாய்லாந்தைச் சந்திக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.