உலகக் கோப்பை: பாகிஸ்தான் - இலங்கை ஆட்டம் மழையால் பாதிப்பு!
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் பிரிஸ்டாலில் இன்று நடைபெறவுள்ளது...
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019உலகக் கோப்பை: பாகிஸ்தான் - இலங்கை ஆட்டம் மழையால் பாதிப்பு!
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் பிரிஸ்டாலில் இன்று நடைபெறவுள்ளது...
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் பிரிஸ்டாலில் இன்று நடைபெறவுள்ளது.
மழை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமாகியுள்ளது. அங்கு மதியம் 12.30 வரை மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது. மாலை 4.19-க்குள் ஆட்டம் தொடங்காவிட்டால் சிக்கல் தான். ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும்.
பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு அணிகளும் இரு ஆட்டங்களில் விளையாடி தலா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இரு அணிகளும் தலா இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளன.