கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

இந்தியா - நியூஸிலாந்து ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது

DIN


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடாத நிலையில் கைவிடப்பட்டது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் நாட்டிங்காமில் மோதவிருந்தன. கடந்த இரண்டு நாட்களாகவே நாட்டிங்காமில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே நிலை தான் இன்றும் நீடித்தது. 

இதனால், இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. எனினும், மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் காரணமாக, இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. 

இதன்மூலம், இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி 4 ஆட்டங்களில் 7 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கிறது. 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் மழை காரணமாக கைவிடப்படும் 4-வது ஆட்டம் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT