மேத்யூ ஹைடன் படம் | ஐசிசி
கிரிக்கெட்

ஆஸி.க்கு எதிரான தொடரில் ரிஷப் பந்த் முக்கிய வீரராக இருப்பார்: மேத்யூ ஹைடன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் முக்கியமான வீரராக இருப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் இந்திய அணிக்கு முக்கியமான வீரராக இருப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ரிஷப் பந்த் முக்கியமான வீரராக இருப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் போன்ற வீரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற தேடல் இருக்கிறது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இந்திய அணிக்கு ரிஷப் பந்த் மிகவும் முக்கியமான வீரராக இருந்தார். அவரது சிறப்பான ஆட்டம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களையும் ஈர்த்தது. அவர் மிகவும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

மேலும், இந்திய அணியில் விராட் கோலி போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருக்கின்றனர். அவர்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பர். கடந்த முறை விராட் கோலி போன்ற முக்கியமான வீரர்கள் அணியில் இல்லாதபோதிலும், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசமாக்கியது.

தற்போது விராட் கோலி போன்ற முக்கிய வீரர்களும் அணிக்குத் திரும்பியுள்ளது இந்தியாவுக்கு பலம் சேர்த்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பேட்டிங்கில் எந்த மாதிரியான யுக்தியை கையாளப் போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT