ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலிய அணி 86 ரன்கள் எடுத்து அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!
அழுத்தத்தில் இருக்கிறேனா?
அடிலெய்டு டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, போட்டி குறித்து பேசிய டிராவிஸ் ஹெட், ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்வதை நினைத்து நான் அதிகம் கவலைப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா ஸ்டம்புகளை குறிவைத்து துல்லியமாக பந்துவீசுகிறார். அவரது பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக்கொடுக்க மாட்டார். ஆனால், ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக பேட் செய்யும்போது, நமது கால்களின் நகர்வுகளை சரியாக மேற்கொண்டு விளையாட வேண்டும்.
இதையும் படிக்க: அடிலெய்டு டெஸ்ட்டின் முதல் நாளில் புதிய சாதனை!
ஜஸ்பிரித் பும்ரா கால்களை குறிவைத்தே அதிகம் பந்துவீசுவார். நான் இந்த விஷயத்தில் கவனம் கொடுத்து விளையாடவுள்ளேன். அவர் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். ஆனால், அவர் மற்ற பந்துவீச்சாளர்களைப் போன்று ஒரு பந்துவீச்சாளரே. பிங்க் பந்துவீச்சில் அவருக்கு எதிராக விளையாடுவதை நினைத்து நான் மிகுந்த அழுத்தத்தில் இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.