மன்மோகன் சிங் மறைவு: கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!
மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கறுப்புப் பட்டையுடன் விளையாடும் இந்திய வீரர்கள்...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, கையில் கறுப்புப் பட்டை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் பாடர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகின்றது. மெல்போர்னில் நடைபெற்று வரும் நான்காவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று அதிகாலை(இந்திய நேரப்படி) தொடங்கியது.
இந்த நிலையில், மைதானத்துக்கு பீல்டிங் செய்ய வந்த இந்திய அணியினர் அனைவரும் கையில் கறுப்புப் பட்டை அணிந்து வந்தனர்.
Advertisement
Advertisement
வீரர்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள பிசிசிஐ, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள் தங்களின் கைகளில் கறுப்புப் பட்டை அணிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.