படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் (எக்ஸ்)
கிரிக்கெட்

கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட தடுமாறினேன்; மனம் திறந்த பாகிஸ்தான் ஆல்ரவுண்டர்!

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வந்ததாக பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் தெரிவித்துள்ளார்.

DIN

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வந்ததாக பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷதாப் கான் தற்போது இலங்கை பிரீமியர் லீக்கில் விளையாடி வருகிறார். இலங்கை பிரீமியர் லீக்கின் நடப்பு சீசனில் அறிமுகமான ஷதாப் கான், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அவர் இதுவரை 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக வலம் வருகிறார்.

இந்த நிலையில், பேட்டிங் மற்றும் பௌலிங்கில் கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வந்ததாக ஷதாப் கான் தெரிவித்துள்ளார்.

ஷதாப் கான் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த மூன்று மாதங்களாக பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறி வந்தேன். கடைசியாக விளையாடிய 7 சர்வதேசப் போட்டிகளில் ஒரு விக்கெட் கூட நான் கைப்பற்றவில்லை. ஆனால், இங்கு முதல் போட்டியிலிருந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறேன். இதுதான் கிரிக்கெட்டின் அழகே. இதுபோன்ற சூழல்களை ஒருவர் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள், சில நேரங்களில் சிறப்பாக செயல்பட முடியாது. ஆனால், தொடர்ச்சியாக நமது உழைப்பை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலிங்கா, கம்மின்ஸின் சாதனை வரிசையில் இடம்பிடித்த ரொமாரியோ ஷெப்பர்ட்!

டி20 உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில் அபிஷேக் சர்மா கோல்டன் டக்!

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு டேஷ் பொறுப்பேற்பு!

த்ரிஷ்யம் - 4 வருமா? ஜித்து ஜோசஃப் பதில்!

டிஷ் டிவி 3வது காலாண்டு நிகர இழப்பு ரூ. 276.23 கோடியாக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT