முகப்பு
கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: தாய்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அபாரம்!

தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Updated On : 22 ஜூலை 2024, 10:03 pm IST
- படம் | ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (எக்ஸ்)
பகிர்:

தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூலை 22) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் தாய்லாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தாய்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக பூசாதாம் 40 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, லவோமி அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் ரபியா கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

Advertisement

Advertisement

97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், 17.3 ஓவர்களில் இலக்கை எட்டி தாய்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக முர்ஷிதா 50 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

இதன்மூலம், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments