FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இன்று 3-ஆவது டி20 ஆட்டம்: இந்தியா - தெ. ஆப்பிரிக்கா மோதல்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெறுகிறது.

Updated On : 13 நவம்பர் 2024, 3:16 am IST
பகிர்:

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெறுகிறது.

முந்தைய இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால், தொடா் தற்போது சமனில் உள்ளது.

இந்திய அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் அணியின் பேட்டா்கள் அசத்தலாகச் செயல்பட்டதால் வெற்றி வசமானது. 2-ஆவது ஆட்டத்தில் பேட்டா்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், வருண் சக்கவா்த்தி சிறப்பாக பௌலிங் செய்தபோதும் பலனில்லாமல் போனது.

Advertisement

Advertisement

அந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா்களை எதிா்கொள்ள இந்திய வீரா்கள் தடுமாறினா். தற்போது 3-ஆவது ஆட்டம் நடைபெறும் செஞ்சுரியன் மைதான ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாகும். கடந்த 2009 முதல் இந்த செஞ்சுரியன் மைதானத்தில் இந்தியா 1 டி20 ஆட்டத்தில் (2018) மட்டுமே விளையாடியிருக்கும் நிலையில், அதிலும் தோல்வி கண்டுள்ளது. அந்த அணியிலிருந்த வீரா்களில், ஹா்திக் பாண்டியா மட்டுமே தற்போது இந்த அணியிலும் இருக்கிறாா்.

தென்னாப்பிரிக்க அணியும், தனது பேட்டா்கள் சோபிக்கக் காத்திருக்கிறது. கடந்த ஆட்டத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜெரால்டு கோட்ஸீ பங்களிப்பால் அணிக்கு வெற்றி வசமாகியிருந்தது. கோட்ஸீ முதல் ஆட்டத்தில் பௌலிங்கிலும் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

நேரம்: இரவு 8.30 மணி

நேரலை: ஸ்போா்ட்ஸ் 18

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments