ரிஷப் பந்த் கோப்புப் படம்
கிரிக்கெட்

மெகா ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார்; முன்னாள் வீரர் நம்பிக்கை!

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார்.

DIN

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் நாளை (நவம்பர் 24) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 25) சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் மெகா ஏலம் நாளை தொடங்கவுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகளுக்குள் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.25 கோடிக்கும் மேல்...

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் நாளை தொடங்கவுள்ள நிலையில், மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சுரேஷ் ரெய்னா (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த்தின் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைகளை தவிர்த்து, அவர் மிகவும் சிறப்பான பண்புகளைக் கொண்டவர். அவர் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தும் பண்புகளைக் கொண்டுள்ளார். அதனால், எந்த ஒரு அணி உரிமையாளரோ அல்லது பயிற்சியாளரோ அவரை இழக்க விரும்பமாட்டார்கள். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்படுவார் என நினைக்கிறேன்.

பஞ்சாப், தில்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளிடத்தில் ரிஷப் பந்த்தினை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு தொகை இருக்கிறது. ஏலத்தில் போட்டி நிலவும் பட்சத்தில், ரூ.25 கோடியைக் கடந்து இன்னும் 4-5 கோடிகள் அதிகத் தொகைக்கு ரிஷப் பந்த் ஏலம் போவார். அவரை யாரும் இழக்க விரும்பமாட்டார்கள்.

இது மூன்று ஆண்டுகளுக்கான ஏலம். ரிஷப் பந்த்தை எந்த அணி ஏலத்தில் எடுக்கிறதோ அந்த அணிக்காக அவர் மூன்று ஆண்டுகள் விளையாடுவார். ரிஷப் பந்த்தை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸிடம் பட்ஜெட் இல்லை. ஆனால், அவர் கண்டிப்பாக ஆர்சிபி அல்லது கொல்கத்தா அணியின் கேப்டனாக மாறப்போகிறார் எனத் தெரிகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் மாறும் பட்சத்தில் அந்த அணிக்கான ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3,440 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊடுருவல்காரா்களிடம் பரிவு காட்டுகிறது காங்கிரஸ், ஆா்ஜேடி: பிரதமா் மோடி

பாகிஸ்தான், சீனா ரகசிய அணு ஆயுத சோதனை: அமெரிக்க அதிபா் டிரம்ப் தகவல்

மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு அண்ணாமலையை விசாரிக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

குடியரசு துணைத் தலைவா் இன்று கோவை வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT