இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமிக்கப்பட்டது பற்றி...
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவை அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை நியமித்துள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை, அவர் தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா செயல்பட்டு வருகிறார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இவரது செயல்பாட்டை தொடர்ந்து, முழு நேரப் பொறுப்பை ஜெயசூர்யாவுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
Advertisement
Advertisement
ஜெயசூர்யா தலைமையிலான இலங்கை அணி, 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியை ஒரு நாள் தொடரிலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரிலும் வென்றிருந்தது.
மேலும், நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலும் சமீபத்தில் 2-0 என்ற கணக்கில் இலங்கை வென்றது.
இதையும் படிக்க : நாக்-அவுட் சுற்று நம்பிக்கையில் இந்தியா
இந்த நிலையில், ஜெயசூர்யா முழு நேர தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக மேற்கிந்தியத் தீவுகளுடன் வருகின்ற 13-ஆம் தேதி இலங்கை அணி மோதவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக பல சாதனைகளை படைத்துள்ள ஜெயசூர்யா, பின்னர், இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.