FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

பேட்டிங், பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்ள முடியும்; இலங்கை கேப்டன் நம்பிக்கை!

தங்களால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்ள முடியுமென இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா தெரிவித்துள்ளார்.

Updated On : 23 செப்டம்பர் 2024, 9:02 pm IST
தனஞ்ஜெயா டி சில்வா (கோப்புப் படம்)
பகிர்:

தங்களால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்ள முடியுமென இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணி, நியூசிலாந்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மேம்படுத்திக் கொள்ள முடியும்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா, தங்களால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மேம்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.

போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எங்களுக்கு டெஸ்ட் போட்டிகளை வெல்லும் திறன் இருக்கிறது. இலங்கை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி பெற்றுத் தருகிறார்கள். காலேவில் மிகப் பெரிய பார்ட்னர்ஷிப் எப்போதுமே வெற்றி பெற உதவுகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் தினேஷ் சண்டிமால் மற்றும் திமுத் கருணாரத்னே இடையிலான பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு உதவியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் எங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

அணியின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் குறித்து பேசப்படுகிறது. இலங்கை அணியின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் குறைந்த அளவிலான சராசரியை வைத்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில், நாங்கள் கவனம் கொடுக்க வேண்டியிருக்கிறது. நான் பந்துவீசுவேன் என எதிர்பார்க்கவில்லை. ரமேஷ் மெண்டிஸுக்கு பந்துவீச்சு கைகொடுக்காததால், அணிக்காக பந்துவீசினேன் என்றார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments