ஜோஸ் பட்லர் படம் | AP
கிரிக்கெட்

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து மனம் திறந்த ஜோஸ் பட்லர்!

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார்.

DIN

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் டிராபியின் குரூப் ஸ்டேஜில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜோஸ் பட்லர் தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பட்லர் அரைசதம் விளாசி அசத்தினார். 166 ரன்களுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

மனம் திறந்த பட்லர்

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ரிலாக்ஸாக உணர்வதாக ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு மனதளவில் லேசாக உணர்கிறேன். அணியின் கேப்டனாக செயல்பட்டு நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால், உங்களது ஆற்றல் அனைத்தும் தோல்விகள் குறித்து சிந்தித்தே வீணாகும். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது என்னுடைய மனதை ரிலாக்ஸாக மாற்றியுள்ளது. தற்போது என்னுடைய பேட்டிங்கில் மட்டும் கவனம் கொடுப்பதால் நன்றாக விளையாட முடிகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் ஒரே நாளில் 380 மி.மீ. மழை! நூறு ஆண்டுகளில் அதிகபட்சம்!

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

பென்ஸ் படத்தில் ரவி மோகன்!

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து ரேசன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்: வாக்காளர்களுக்கு ராகுல் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT