FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

18 வயது வீராங்கனையின் அதிவேக சதம்: எலிமினேட்டரில் அசத்தல் வெற்றி!

சாதனை படைத்த தவினா பெர்ரின் குறித்து...

சதமடித்த தவினா பெர்ரின்... - படம்: எக்ஸ் / தி ஹன்ட்ரெட்
பகிர்:

தி ஹன்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் தவினா பெர்ரின் அதிவேகமாக சதம் அடித்த முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆடவர் பிரிவிலும் சேர்த்து ஒரு பந்து அதிகமாக பிடித்து, இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 100 பந்துகள் கொண்ட தி ஹன்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டரில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியும் லண்டன் ஸ்பிரிட் வுமன் அணியும் மோதின.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில், நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை தவினா பெர்ரின் (18 வயது) 42 பந்தில் அதிரடியாக சதம் அடித்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்த அணி 214/5 ரன்கள் குவிக்க, அடுத்து ஆடிய லண்டன் அணி 172/9 ரன்கள் எடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

மகளிர் பிரிவில் அதிவேகமாக சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையும் ஆடவர் பிரிவில் சேர்த்து இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் 41 பந்துகளில் சதமடித்து ஹாரி புரூக் முதலிடத்தில் இருக்கிறார்.

தவினா பெர்ரின் இந்தப் போட்டியில் 15 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் சௌதர்ன் பிரேவ் வுமன்ஸ் அணியும் இந்திய நேரப்படி இன்று மாலை 6.45 மணிக்கு மோதுகின்றன.

summary

Davina Perrin hit a sublime record-breaking century as Northern Superchargers stormed into The Hundred final with a 42-run win over London Spirit in the women's Eliminator.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments