டாஸ் வென்ற மகிழ்ச்சியில் கேப்டன் கே.எல்.ராகுல்.  படம்: பிசிசிஐ
கிரிக்கெட்

20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற இந்தியா..! இரண்டு அணியிலும் மாற்றங்கள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

கடைசியாக இந்திய அணி 2023 உலகக் கோப்பை அரையிறுதியில் டாஸ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக திலக் வர்மா அணியில் இணைந்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காயம் காரணமாக விலகிய ஸோர்ஸி, பர்கருக்குப் பதிலாக ரிக்கல்டன், பார்ட்மன் அணியில் இணைந்துள்ளார்கள்.

டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு இந்தத் தொடரில் வெல்ல, இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

India won the toss and elected to bowl in the final ODI against South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரகதப் பச்சை... ரிங்கு ராஜ்குரு!

தவெக பொதுக்கூட்டம்! புதுச்சேரி அரசின் நிபந்தனைகள்!

தென்னாப்பிரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு! 11 பேர் பலி!

கடின உழைப்பின் அடையாளம்... 23 ஆண்டுகளுக்குப் பிறகான ரேஸிங் அனுபவம் பகிர்ந்த அஜித்!

புற்றுநோய் வருவதை முன்கூட்டியே அறிய முடியுமா? ஜோதிடர் சொல்வதென்ன?

SCROLL FOR NEXT