டாஸ் வென்ற மகிழ்ச்சியில் கேப்டன் கே.எல்.ராகுல்.  படம்: பிசிசிஐ
கிரிக்கெட்

20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற இந்தியா..! இரண்டு அணியிலும் மாற்றங்கள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

கடைசியாக இந்திய அணி 2023 உலகக் கோப்பை அரையிறுதியில் டாஸ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக திலக் வர்மா அணியில் இணைந்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காயம் காரணமாக விலகிய ஸோர்ஸி, பர்கருக்குப் பதிலாக ரிக்கல்டன், பார்ட்மன் அணியில் இணைந்துள்ளார்கள்.

டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு இந்தத் தொடரில் வெல்ல, இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

India won the toss and elected to bowl in the final ODI against South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மடாலயங்களில் படப்பிடிப்பு

எல்டிஐமைண்ட்ட்ரீ 3வது காலாண்டு நிகர லாபம் 10.5% சரிவு!

நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு இந்தியா: இஸ்ரோ தலைவர் பெருமிதம்

அமெரிக்காவில் பனிப்புயலால் கடும் பாதிப்பு: ஒரேநாளில் 10,000 விமானங்கள் ரத்து!

கலைத்துறையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜா ஸ்தபதி!

SCROLL FOR NEXT