20 போட்டிகளுக்குப் பிறகு டாஸ் வென்ற இந்தியா..! இரண்டு அணியிலும் மாற்றங்கள்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி குறித்து...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கடைசியாக இந்திய அணி 2023 உலகக் கோப்பை அரையிறுதியில் டாஸ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக திலக் வர்மா அணியில் இணைந்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காயம் காரணமாக விலகிய ஸோர்ஸி, பர்கருக்குப் பதிலாக ரிக்கல்டன், பார்ட்மன் அணியில் இணைந்துள்ளார்கள்.
டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு இந்தத் தொடரில் வெல்ல, இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
India won the toss and elected to bowl in the final ODI against South Africa.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.