PTI
கிரிக்கெட்

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

ரெய்னா, ரோஹித் சர்மா வரிசையில் இடம்பிடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்...

இணையதளச் செய்திப் பிரிவு

சர்வதேச கிரிக்கெட்டில் 3 வடிவ போட்டிகளிலும் சதம் அடித்த 6-ஆவது இந்திய வீரர் சாதனைப் பட்டியலில் இணைந்தார் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஒருநாள் ஆட்டம் சனிக்கிழமை(டிச. 6) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 271 ரன்கள் இலக்கை, இந்திய அணி 39.5 ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தது. இந்த ஆட்டத்தில், 121 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகளுடன் 116 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார் ஜெய்ஸ்வால்.

இந்த ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 3 வடிவ போட்டிகளிலும் சதம் கடந்த 6-ஆவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ஜெய்ஸ்வால். இந்த சாதனைப் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, கே. எல். ராகுல், விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Yashasvi Jaiswal becomes the 6th India batter in men's cricket to score centuries in all three formats

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT