யு-19 ஆசிய கோப்பையில் யுஎஇ அணிக்கு எதிராக இந்திய அணி 433 ரன்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார்.
துபையில் நடைபெற்றுவரும் முதல் யு-19 ஆசிய கோப்பை போட்டியில் டாஸ் வென்ற யுஎஇ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 433 ரன்கள் குவித்துள்ளது.
சூர்யவன்ஷியைத் தொடர்ந்து ஆரோன் ஜார்ஜ், விஹான் மல்ஹோத்ரா தலா 69 ரன்கள், வேதாந்த் த்ரிவேதி 38 ரன்கள் எடுத்தார்கள்.
யுஎஇ அணி சார்பில் யுக் சர்மா, உத்தேஷ் சூரி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.