முகப்பு
கிரிக்கெட்

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 19 டிசம்பர் 2025, 6:48 pm IST
சஞ்சு சாம்சன் (கோப்புப் படம்)
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாதில் இன்று (டிசம்பர் 19) நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

Advertisement

Advertisement

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குல்தீப் யாதவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரும், ஷுப்மன் கில்லுப் பதிலாக சஞ்சு சாம்சனும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

summary

In the final T20 match against India, South Africa won the toss and elected to bowl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.