சூரியவன்ஷிக்கு ‘பால புரஸ்கார் விருது’.! குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்!
இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்ததைப் பற்றி...
இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(டிச.26) கௌரவித்தார்.
கலை மற்றும் கலாசாரம், வீரம், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவைகள், விளையாட்டு, சுற்றுப்புறச் சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் சாதனை புரிந்த 5 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு ஆண்டுதோறும் வீர பால திவஸ் (டிச. 26) நாளில் பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருதை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 20 சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை வழங்கி கௌரவித்தார்.
Advertisement
Advertisement
நிகழாண்டு 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 20 பேர் இந்த விருதுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதக்கம், சான்றிதழ், ஆவணத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இந்திய அணியின் இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்தார்.
பிகாரைச் சேர்ந்த 14 வயதான வைபவ் சூரியவன்ஷி கடந்தாண்டு நடந்த மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தனது அதிரடி பேட்டிங்கால் வியக்கவைத்த சூரியவன்ஷி, 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக்கோப்பை, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர், இளம்வீரர்களுக்கான ஒருநாள், இளம்வீரர்களுக்கான டெஸ்ட், இந்தியா ஏ என அனைத்துப் போட்டிகளிலும் சதம் விளாசி அசத்தி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரிலும் 84 பந்துகளில் 190 ரன்கள் விளாசி வியக்கவைத்தார்.
பால புரஸ்கார் விருது பெற்ற வைபவ் சூரியவன்ஷி, பிரதமர் மோடியையும் சந்திக்கவிருக்கிறார்.
Vaibhav Suryavanshi was honoured with the Pradhan Mantri Rashtriya Bal Puraskar award today by the President of India, Droupadi Murmu, in New Delhi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.