150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் முதல் இலங்கை வீராங்கனை!
இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து சர்வதேச டி20யில் 150 போட்டிகளில் விளையாடும் முதல் இலங்கை வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து சர்வதேச டி20யில் 150 போட்டிகளில் விளையாடும் முதல் இலங்கை வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான நான்காவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (டிசம்பர் 28) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.
இந்த போட்டி இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து விளையாடும் 150-வது சர்வதேச டி20 போட்டியாகும். மேலும், இலங்கை அணிக்காக 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுவரை இலங்கை அணிக்காக டி20 போட்டிகளில் சமாரி அத்தப்பத்து 3507 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 25.23 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 109.97 ஆகவும் உள்ளது. அவர் 3 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடித்துள்ளார்.
35 வயதாகும் சமாரி அத்தப்பத்து சர்வதேச டி20 போட்டிகளில் 69 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி 0-3 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Sri Lanka captain Chamari Athapaththu has set a record as the first Sri Lankan woman cricketer to play in 150 international T20 matches.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.