டபிள்யூபிஎல்: த்ரில்லர் வெற்றி பெற உதவிய 16 வயது தமிழக வீராங்கனை..!
மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபியை மும்பை அணி கடைசி ஓவரில் வீழ்த்தி அசத்தியது.
கிரிக்கெட்டபிள்யூபிஎல்: த்ரில்லர் வெற்றி பெற உதவிய 16 வயது தமிழக வீராங்கனை..!
மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபியை மும்பை அணி கடைசி ஓவரில் வீழ்த்தி அசத்தியது.
மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபியை மும்பை அணி கடைசி ஓவரில் வீழ்த்தி அசத்தியது.
மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் சோ்த்தது.
பெங்களூரு பேட்டா்களில் அதிகபட்சமாக எலிஸ் பெரி 43 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்கள் விளாசினாா்.
அடுத்து விளையாடிய மும்பை அணி 19.5 ஓவரில் 170/6 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 50 ரன்கள், அமன்ஜோத் கௌர் 34 ரன்கள் எடுத்தார்கள்.
கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவையான போது கமலினி முதல் பந்தை டாட் ஆக்கவும் 2ஆவது பந்தில் 2 ரன்களும் 3ஆவது பந்தில் 1 ரன்னும் எடுத்தார்.
4ஆவது பந்தில் அமன்ஜோத் கௌர் 1 ரன் எடுக்க 2 பந்தில் 2 ரன்கள் தேவையாக இருந்த போது 5ஆவது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை தன் வசமாக்கினார்.
இந்த வெற்றியுடன் மும்பை அணி ஆர்சிபியை 6 போட்டிகளில் 4இல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது கமலினிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.